4 மார்., 2020
துரியாதீத தவம் - பலன்கள்
துரியாதீத தவம்
1. பொறுமை, விட்டுக் கொடுத்தல், ஈகை ஆகிய மூன்று பண்புகள்
குண்டலினியோகிகட்குத் தானாக அமையும். (Tolerance, Adjustment & sacrifice).
குண்டலினியோகிகட்குத் தானாக அமையும். (Tolerance, Adjustment & sacrifice).
2. இயற்கையின் மறைபொருள்களை உணர முடியும்.
3. மக்களுக்குள் இருக்கும் வேறுபாடுகள் ஆகிய உருவ அமைப்பு, குணம்,
அறிவின் உயர்வு, கீர்த்தி, உடல் வலிவு, சுகம், செல்வம் ஆகிய ஏழையும் நல்ல
நிலைக்கு மாற்றி இணைய வைக்கிறது.
அறிவின் உயர்வு, கீர்த்தி, உடல் வலிவு, சுகம், செல்வம் ஆகிய ஏழையும் நல்ல
நிலைக்கு மாற்றி இணைய வைக்கிறது.
4. வினைப்பதிவுகளை மாற்றுகிறது.
5. மனதின் மறுமுனையான தன்னைத் தெய்வத்தோடு இணைக்கிறது.
6. தன்முனைப்பு, பழிச்செயல் பதிவுகள், வேண்டாப்பற்று என்று
கூறப்படும் மும்மலங்களையும் நீக்கி விழிப்பு நிலைக்கு வரவழைக்கிறது.
கூறப்படும் மும்மலங்களையும் நீக்கி விழிப்பு நிலைக்கு வரவழைக்கிறது.
7. யோகிகள் பற்றறிவினின்று விடுபட்டுக் கற்றறிவில் ஈடுபட்டு முடிவில் முற்றறிவில்
லயம் ஆவர்.
லயம் ஆவர்.
8. பிரவிருக்தி மார்க்கத்தினின்று விடுபட்டு நிவர்த்தி மார்க்கத்திற்கு ஈர்க்கிறது.
9. புலனடக்கம் உண்டாகி அறிவு அமைதியடையச் செய்கிறது.
10. பிரம நிலையான உண்மை அறிவதற்கு நுண்மையறிவு ஏற்படச் செய்கிறது.
11. எல்லை கட்டிய தன்மையினின்று விடுபடச் செய்கிறது.
12. பகுதி அறிவு ஆனது முழுமையை நோக்கிப் பயணம் ஏற்க உதவுகிறது.
13. மனம் ஓடாது, தன்னை மறவாது மனதைப் பயிற்சிப்படுத்த வேண்டும்.
மனமே செயல்படும்.
மனமே செயல்படும்.
14. எண்ணம், சொல், செயலால் எவருக்கும், எப்போதும் நன்மையே
விளைவிக்க நாட்டமாயிருக்கச் செய்யும்.
விளைவிக்க நாட்டமாயிருக்கச் செய்யும்.
பழிச்செயல் நீக்கம்
பிராயச்சித்தம், மேல்பதிவு, அடியோடு அழித்தல் (Expiation, superimposition & dissolution) என்று கருமப் பதிவுகளைப் போக்கிக்கொள்ள மூன்று வழிகள் உள்ளன. ஆக்கினைத் தவத்தினால் ஆகாமிய கர்மம் போகும். துரிய நிலைத் தவத்தில் ஆகாமிய கர்மமும், பிராரப்த கர்மமும் போகும். துரியாதீத தவத்தில் ஆகாமிய கர்மம், பிராரப்த கர்மம், சஞ்சித கர்மம் ஆகிய மூன்றுமே போகும். நீண்ட நாள் மருந்தினால் போகாத நோய் கூடத் துரியாதீத தவத்தால் நீங்கும்.
சமாதிநிலை
ஜீவகாந்தத்தின் விளைவுதான் மனம். மனம் தன் மூலத்தை அறிவதற்காகவே, அடைவதற்காகவே, விரிகிறது. விரிந்து விரிந்து நிற்கிறது. அனுபோக உணர்ச்சிகளில் இருக்கும் மனதிற்கு வழி தெரியவில்லை; வேகமோ குறையவில்லை; ஆகவே எங்கெங்கோ சென்று நிற்கிறது. எது எதிலேயோ சிக்கிக் கொள்கிறது, துன்புறுகிறது. ஆனால், தன் லட்சியத்தை அடையும் வரை மனத்தின் விரியும் முயற்சி சோர்வடைவதில்லை. மூலத்தை அடைந்த பிறகுதான் மனதிற்கு அமைதி கிடைக்கிநது. அதுவரை அமைதி கிடைப்பதேயில்லை.
தன் மூலத்தை அறிய எழுந்த வேகம் திசை தப்பி நிற்கும் அளவிற்கு அமைதியின்மையின் அளவும், துன்பத்தின் அளவும் இருக்கும். பிராயச்சித்தம், மேல்பதிவு, தேய்த்தழித்தல் (expiation, superimposition and dissolution) என்று கருமப் பதிவுகளைப் போக்கிக் கொள்ள மூன்று வழிகள் இருப்பதை நான் பலமுறை விளக்கியுள்ளேன். அவற்றில் கடைசியான தேயத்தழித்தல் என்பது தவத்தினால் தான் சாத்தியமாகும்.
ஆக்கினைத் தவத்தினால் ஆகாமிய கர்மம் போகும். துரியநிலைத்தவத்தில் ஆகாமிய கர்மமும், பிராரப்த கர்மமும் போகும். துரியாதீத தவத்தில் ஆகாமிய கர்மமும், பிராரப்த கர்மமும், சஞ்சித கர்மம் ஆகிய மூன்றுமே போகும். நீண்ட நாள் மருந்தினால் போகாத நோய் கூடத் துரியாதீத தவத்தால் போகும். துரியாதீத தவம் ஒரு மாபெரும் புதையல். இதில் எல்லாமே அடக்கம். எந்த அதிர்வியக்கத்தில் (frequency) மனம் நின்றால் பிரபஞ்ச ரகசியம் எல்லாம் அறியப்படுமோ அந்த இடந்தான் சமாதிநிலை.
யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)