மாயை என்பதன் விளக்கம்:
மனம் உணர்ச்சியில் எல்லை
கட்டித் தனது நிலை மறந்து உணர்ச்சி வயமாகி அறுகுணங்களாகச் சூழ்நிலைக்கு ஏற்ப மாற்றமடைகிறது.
இந்த நிலையில் தான் துன்பங்களைப் பெருக்கும் பழிச் செயல்களும், பதிவுகளும் ஏற்படுகின்றன.
உயிரில், மூளையில், வித்தில், உயிரணுக்களில் இப்பதிவுகள் மீண்டும், மீண்டும் பிரதிபலிக்கும்
போது அதே செயலைச் செய்ய உயிருக்குத் தூண்டுணர்வு ஏற்பட்டுச் செயல் புரியும் பழக்கம்
ஏற்படுகிறது. இம்முறையில் செயல்படும் அறிவு நிலையை அறிவின்
மயக்க நிலை என்றும் - மாயை என்றும் வழங்குகிறோம். அருள் தந்தை வேதாத்திரி மகரிஷி.
மாயை என்பது இந்தியத் தத்துவங்களில்
பெரிதும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் பதங்களில் (சொல்) ஒன்று. இது
- சங்கர வேதாந்தம்
- சைவ சித்தாந்தம் என்பவற்றில் முதன்மை பெறும் விடயமாகும்
சங்கர வேதாந்தம்
சங்கர வேதாந்தத்தில் மாயை பெறும் இடம் இன்றியமையாததாகும். சங்கரர் மாயைக்கு பிரதான இடத்தைக் கொடுத்துள்ளார். பிரம்மம் உலகாகவும், ஆன்மாவாகவும் தோன்றுதற்கு மாயையே காரணம் என்கின்றார். மாயைக்கு இவர் கொடுத்த முக்கியத்தினாலேயே சங்கரரை 'மாயாவாதி' என்று அழைக்கும் மரபு உண்டு.
சங்கர
வேதாந்தத்தின்படி
மாயையின்
தோற்றம்:
பிரம்மத்தின் ஒரு சிறு அம்சமே(பகுதி) மாயை. இந்த மாயை சத்வகுணம், இரசோகுணம் மற்றும் தாமசகுணம் எனும் முக்குணங்களுடன் விண்வெளி, காற்று, தீ, நீர், பருப்பொருட்கள் (விண்மீன்கள், கோள்கள், உயிரினங்கள் (மனிதன் உட்பட)) ஐந்து பூதங்களைத் தோற்றுவித்தது. மாயை தோற்றுவித்த இவ்வைந்து பூதங்களும் நிலையற்றவை. நிலையாக தோண்றுவது போல் தோற்றமளிக்கும் விண்மீன்களும் ஒரு காலத்தில் அழிவுக்கு உட்பட்டதுதான். ஊழிக்காலத்தில் இவையெல்லாம் பிரம்மத்திடம் ஒன்றித்துவிடும். பிரம்மத்தை கூட விளக்கி விடுவார்கள் சங்கர வேதாந்திகள். ஆனால் மாயையின் குணங்களை விளக்க வாயால் முடியாது (அநிர்வசனீயம்) என்பர். பிரம்மத்திற்கு முதலும் முடிவும் இல்லையோ, அதே போல் மாயைக்கும் முதலும் முடிவும் இல்லை என்பர்.
மாயையின்
முக்கிய குணங்கள்
அத்வைதிகளின் கருத்துப்படிபிரம்மத்தை மறைத்து, நிலையில்லாத பொருளை நிலையானது எனக் காட்டுவது மாயை.
யா = விரிதல்
மாயை எனும் சொல்லே உலகம் தன்னிலிருந்து தோன்றுவதற்கும், தன்னில் வந்து ஒடுங்குவதற்கும் அடிப்படைத் தத்துவம் ஆகும். (தமிழில், மாயம் என்பது தெளிவில்லாமை, குழப்பம், மறைந்து போகும் தன்மை என்ற பல பொருட்களில் பயன்படுத்தப்படுகின்றது.)
பிரபஞ்சத்தின் மறைமுகமான, மாறக்கூடிய தன்மையே மாயை. இது நிலையானதாக இல்லாமல் மாறிக்கொண்டே இருக்கும். மாயை அறியாமையை உருவாக்குகிறது. நான் என்ற ஈகோ போகும் வரை, இறை சக்தியுடன் ஒன்றுபட விடாமல் தடுப்பது மாயையின் அறியாமைதான்.
𝟬𝟭)
சத்வ குணம்: (சத்துவ குணம்)
இக்குணத்திலிருந்து தோன்றும் இயல்புகள்: நற்காரியங்களில் மனதைச் செலுத்தும் குணம், மன அடக்கம் (சமம்), புலன் அடக்கம் (தமம்), துன்பங்களைப் பொறுத்துக் கொள்ளும் இயல்பு (சகிப்புத் தன்மை), விவேகம், வைராக்கியம், தவம், வாய்மை, கருணை, மகிழ்ச்சி, நம்பிக்கை, பாவம் செய்வதில் கூச்சப்படுதல் (லஜ்ஜை), தன்னிலேயே மகிழ்ந்திருத்தல் (ஆத்மரதி), தானம், பணிவு மற்றும் எளிமை.
𝟬𝟮) ரஜோ குணம்: (இராட்சத குணம்)
இக்குண இயல்புகள்: ஊக்கம், ஞானம், வீரம், தருமம், தானம், கல்வி, ஆசை, முயற்சி, இறுமாப்பு, வேட்கை, திமிர், தெய்வங்களிடம் செல்வங்கள் வேண்டுவது, வேற்றுமை எண்ணம், புலனின்பப் பற்று, சண்டைகளில் உற்சாகம், தன் புகழில் ஆசை, மற்றவர்களை எள்ளி நகையாடுவது, பராக்கிரமம், பிடிவாதத்துடன் ஒரு முயற்சியை மேற்கொள்ளுதல். பயனில் விருப்பம் கருதி செய்யும் செயல்கள் ராஜசமாகும்.
𝟬𝟯) தமோ குணம் (தாமச குணம்)
தமோ குண இயல்புகள்: காமம், வெகுளி, மயக்கம், கலக்கம், கோபம், பேராசை, பொய் பேசுதல், இம்சை, யாசித்தல், வெளிவேசம், சிரமம், கலகம், வருத்தம், மோகம், கவலை, தாழ்மை, உறக்கம், அச்சம், சோம்பல், காரணமில்லாமல் பிறரிடம் பொருட்களை எதிர்பார்த்தல் மற்றும் பிறர்க்கு கேடு விளைவிக்கும் செயல்கள் செய்வதும், பகட்டுக்காக செய்யப்படும் செயல்கள் தாமச குணங்கள் ஆகும்.
இதில் முதல் குணம் விழிப்பு நிலை பண்புகளையும் (Awareness), இரண்டாவது அறிவார்ந்த பண்புகளையும் (Intelligent), மூன்றாவது அறியாமை பண்புகளையும் (Ignorance) கொண்டுள்ளது.
தாயுமானவரின் பாடலில்:
சகமனைத்தும் பொய்யெனவே தானுணர்ந்தால் துக்க
விட்டுப் பிரியாத மேலான அத்துவிதக்
கட்டுக்குள் ஆவதென்றோ காண்.
என்னை வெளிப்படுத்திக்கொள்ளாத பிரம்மமாக இருக்கையில், நானே மாயையாக இருக்கிறேன் என்றும் ஸ்ரீ க்ருஷ்ணன் தெளிவாகவே குறிப்பிடுகிறான்.
மாயையில்
இருந்து
விடுபடுவது
எப்படி?
நாம் அனைவரும் மாயையின் கைப்பிள்ளையாக இவ்வுலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். மாயை இரு வகை படும் அவை
அசுத்த மாயை
அசுத்த மாயை என்பது உலகியலில் உள்ளவர்களை பற்றியது. மனம் வழி, புலன் வழி நடக்க வைப்பது.
சுத்த மாயை என்பது அசுத்த மாயையை விட்டு விலகி இருக்கும் ஞானிகளை பற்றியது. அதாவது ஆன்மாவை பற்றியது சுத்த மாயை. சிவம் மட்டுமே மாயை இல்லாதது.
உலகியலில் உள்ளவர்கள் மாயை வயப்பட்ட காரணத்தால் மனம் வழியும் புலன் வழியும் நடந்து வினைகளை சேர்த்து கொள்கின்றார்கள். வினை ஒழிந்தால் மட்டுமே பிறப்பிலிருந்து விடு பட முடியும். ஆக பிறப்பிற்கு காரணம் நல்வினை மற்றும் தீவினை வினை ஏற்பட முதல் காரணம் மனம் மற்றும் புலன் வழி நடப்பது மனம் மற்றும் புலன் வழி நடப்பதற்கு முதற் காரணம் அசுத்த மாயை, அசுத்த மாயை தோன்றுவதற்கு காரணம் சுத்த மாயை கொண்ட ஆன்மா தோன்றுவதற்கு அடிப்படை சுத்த சிவம்.
அசுத்த மாயையில் இருந்து விடுபட்டு விட்டால் சுத்த மாயை மிக சுலபமாக விலகி ஆன்மா மீண்டும் பிறவாத நிலையை அதாவது சிவத்தை அறிந்து சிவத்துடன் கலந்து விடும். ஆக அசுத்த மாயைக்கு கைப்பாவையாக செயல்படுவது நமது மனம் தான். அப்படிப்பட்ட மனதின் செயல்களை நமது அறிவின் துணை கொண்டு அறிவின் வழி நடக்க பழக்கப்படுத்தி விட்டால் மனமானது பார்த்த பொருட்களை எல்லாம் பற்றுகின்ற பழக்கத்தை மாற்றிக்கொள்ளும்.
அப்படி மனதை அறிவின் வழி கொண்டு வருவதற்கு ஒரு சுலபமான பயிற்சி உள்ளது. அது மனதை அதன் பாதையில் ஓட விட்டு நமது அறிவால் மனதை பின் தொடர்வது. எப்படி என்றால் நமது நண்பர் ஒருவரை அவருக்கு தெரியாமல் நாம் பின் தொடர்கிறோம் என்றால் அவருக்கு தெரியாத வரை அவரது விருப்பத்திற்கு சென்று கொண்டிருப்பார். அதுவே அவரை நாம் கண்காணிக்கிறோம் என்று அவருக்கு தெரிந்து விட்டது என்றால் அவருடைய செயல்கள் தானாகவே ஒழுங்கு பட ஆரம்பிக்கும். அதை போல் நாம் நம் மனதின் செயல்களை கவனிக்க தொடங்கினால் நமது மனமானது சிறிது சிறிதாக தன்னுடைய செயல்களை குறைத்து கொண்டு அறிவிடம் சரணடைந்து அறிவின் வழி நடக்க தொடங்கும்.
அறிவின் வழி மனம் நடக்க தொடங்கினால் புலன் வழி மனம் ஓடாது. ஒவ்வொரு செயலும் அறிவின் வழி நடக்க தொடங்கும் போது நாம் மாயையின் வழி நடக்கிறோம் என்ற எச்சரிக்கை அறிவு நமக்கு அளித்து கொண்டிருக்கும். இதன் காரணமாக நமது செயல்கள் யாவும் தானாகவே தூய்மை பெறும்.
அடுத்து ஒரு சுலபமான பயிற்சி நாம் செய்ய போகின்ற செயல்கள் சரியா தவறா என்று நம் அறிவின் துணை கொண்டு பகுத்து பார்த்து பின்பு அந்த செயலை செய்வதன் மூலம் தவறான செயல்களை செய்வதிலிருந்து நாம் மிக சுலபமாக விடுபடலாம். அடுத்து நாம் செய்த செயல்களை வேறு ஒருவர் பார்ப்பது போல் விலகி நின்று பார்த்தால் நாம் செய்த செயல்கள் நமக்கே சில சமயம் சிரிப்பாக வரும். சில செயல்கள் நாம் இது போல் செய்திருக்க கூடாது என்று தோன்றும். சில செயல்கள் நமக்கு மிக்க மகிழ்ச்சியை தரும்.
இப்படிப்பட்ட பயிற்சியின் மூலம் நாம் நமது மனதை அறிவின் வழி நடக்கப் பழக்கப் படுத்தி விட்டால் நாம் மிக சுலபமாக மாயையின் பிடியிலிருந்து விடுபடலாம்.
செல்: 9655472931
புதுக்கோட்டை மாவட்டம்.




