சிற்றறிவு என்பதன் விளக்கம்:
புலன் இன்பத்தில் மட்டும் மனம் நிலைத்து இருக்கின்றபோது, மனம் அதில் எல்லை கட்டி உணர்ச்சி நிலையில்தான் இயங்கும். அதுதான் சிற்றறிவு; சிற்றின்பம் என்று சொல்வது.
பேரறிவு என்பதன் விளக்கம்:
பேரறிவு என்பது “நான் யார்” என்று தெரிந்து கொண்ட பிறகு வந்த அறிவு. எல்லாம் வல்ல இறைநிலையே இங்கு அறிவாக இயங்கிக் கொண்டிருக்கிறது. அதே போல எல்லாப் பொருளிலேயும் அறிவாக இருப்பது அதுவே தான் என்றபோது மனம் விரிந்து அந்தப் பொருள் நிலையோடு, ஆதி நிலையோடு, பிடிப்புகொள்கிறது. அந்தப் பிடிப்பிலிருந்து பார்க்கிறபோது, எல்லாப் பொருளும் ஒரே இடத்திலிருந்துதான் உற்பத்தியாகி இயங்கிக் கொண்டிருக்கின்றன. எந்த இடத்திலும் உணர்ச்சி ஒன்றுதான். அதனால்தான் அந்த உணர்ச்சிக்கு ஒத்தும், உதவியும் வாழவேண்டும் என்கிற தெளிவு வருகின்றபோது, இது பேரறிவு.
சிற்றறிவு – பேரறிவு வேறுபாடு:
சிற்றறிவு என்பது உயிர்களுக்கே உரிய, மனம் அல்லது பாசத்தால் கட்டுப்படுத்தப்பட்ட வரையறுக்கப்பட்ட அறிவைக் குறிக்கிறது, அதேசமயம் பேரறிவு என்பது இறைவனுக்கு உரிய, எல்லாவற்றையும் ஒருங்கே அறியும் எல்லையற்ற அறிவாகும். சிற்றறிவு உள்ள உயிர்கள் தாங்கள் அறிந்ததைக் கொண்டு கர்வம் கொள்கின்றன, ஆனால் பேரறிவு கொண்ட இறைவன் உயிர்களுக்கு உள்ளேயே இருப்பவர் என்றும், அவருடைய அறிவால் எந்தவிதமான கட்டுப்பாடுகளும் இல்லை என்றும் நம்பப்படுகிறது.
பேரறிவோடு இணக்கமாய் இருப்பது எவ்வாறு:
எனக்கு இன்பம் வேண்டும் யார் என்ன ஆனாலும் சரி, யார் என்ன சொன்னாலும் சரி என்று குறுகியிருக்கின்றபோது இது சிற்றறிவு. நாம் இப்போது பெரும்பாலும் சிற்றறிவு நிலையிலிருந்து பழகி விட்டோம். அப்படியின்றி அடுத்து அடுத்து எந்த காரியம் செய்தாலும் மற்றவருக்கு முரண்பட்டு இல்லாமல், பிற்காலத்தில் முரண்பாடு ஏற்படாதவாறு, இறை நிலையினுடைய ஒழுங்கு அமைப்புக்கு கேடில்லாமல் நான் வாழவேண்டும் என்ற மன விரிவோடு செய்கிறபோது, பேரறிவோடு இணைந்து செயல்படுகிறோம்.
அது என்ன என்று தெரிந்துகொள்ள வேண்டுமானால் அடுத்தடுத்து தியானம் செய்கிறபோது மனம், பதிவு செய்யக்கூடிய புலனறிவைக் கடந்து நல்லறிவிலே நிலைபெறுகிறது. புலனறிவில் நிற்கும்போது மனம் இறைநிலையை நெருங்க முடியாதவாறு உணர்ச்சி நிலையிலிருக்கும். அது இறைநிலையை நெருங்க நெருங்க சிக்கலுக்கு விடை கிடைக்கும். இதுதான் பேரறிவோடு இணைவது. அப்படி கிடைக்கக்கூடிய விடையை சிந்தித்துப் பார்த்தால் அடுத்து இறைநிலையிலேயே நின்று விளக்கங்களை பெறுவதற்கு வாய்ப்பாக இருக்கும். பழகப் பழக இதில் வெற்றி கிடைக்கும்.
அறிவையே
அறியும்
அறிவின் விளக்கம்:
அறிவு வடிவு என்று அருள்செய்தான் நந்தி;
அறிவு வடிவு என்று அறிந்து இருந்தேனே
என்பது நமது கருமூலம் அறுக்கவந்த திருமூல நாயனாரின் அருள்வாக்கு.
அறிவு வடிவு எது என்று அறியாமல் மயங்கி இருந்தேன். அது நானே என்று எனக்கு அருளப்பட்டது. என்னை உணர்ந்து என்னிலே இருந்தேன். அறிவது உயிர். அறியப்படுவதும் உயிர். அறியும் வழி அருள். அறிவே அறிவை அறியும்; அறிவிக்கும்.
செந்தில்குமார்
செல்: 9655472931
நச்சாந்துபட்டி,
புதுக்கோட்டை மாவட்டம்.
.jpg)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக